Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், மேட்டு அக்ரஹாரம், சேலம் - 636001, சேலம் .
Arulmigu Sugavanesuwarar Temple, Mettu Agraharam, Salem - 636001, Salem District [TM004858]
×
Temple History

தல பெருமை

சேலம் மாநகரின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்று நதிக்கரையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கிருதாயுகத்தில் நான்கு மறைகள் அரசமர வடிவில் பூஜித்து தேவர்களின் பாவங்களை போக்கியதால் பாபநாசம் என்றும், துவாபர யுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீச்சுரம், என்றும், திரேதாயுகத்தில் காமதேனு வழிபட்டதால் பட்டீசவரம் என்றும் பெயர் பெற்றது. கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுகப்பிரம்ம மகரிசி வழிபட்டதால் சுகவனம் என்றும் பெயர் பெற்றது. ஒருமுறை பிரம்மதேவர் படைப்பின் ரகசியத்தை சுகமுனிவரிடம் கூற, அவர் அதனை சரஸ்வதிதேவியிடம் தெரிவித்ததால் சினங்கொண்ட பிரம்மதேவர் சுகமுனிவரை கிளியாகப்பிறந்திட சாபம் கொடுத்தார். தன் சாபம் நீங்குவதற்கு பிரம்மதேவரிடம் விமோசனம் கேட்க, பிரம்மதேவர் சுகமுனிவரிடம் பூலோகத்தில் இத்திருத்தலத்தில் சுவாமி புற்றின் அடியில் வீற்றிறுப்பதாகவும், அவரை வழிபாடு செய்தால் உமது சாபம்...

இலக்கிய பின்புலம்

சேலம் சுகவனேசுவரர் திருக்கோயில், சேலம் நகர் தல வரலாறு ஒருமுறை பிரம்மலோகத்தில் தேவர்கள், தவசிகள் என அனைவரும் பிரம்மதேவரின் படைப்புத்திறனைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது படைப்பின் இரகசியத்தை பிரம்மதேவன் அவர்களுக்கு எடுத்துக்கூறினார். இதைக்கேட்ட சுகமுனிவர் (கிளிபோல் பேசும் தன்மையுடையவர்)சரஸ்வதியிடம் சென்று பிரம்மலோகத்தில் தான் அறிந்த படைப்பு இரகசியத்தைச் சரஸ்வதி தேவியிடம் கூறிவிடுகிறார். இதையறிந்த பிரம்மன், சுகமுனிவரிடம், காதால் கேட்டதைத் திரும்பச் சொல்லும் கிளியின் தன்மையைக் கொண்ட நீ கிளியாகக் கடவாய் எனச் சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த முனிவர், பிரம்மனிடம் சாபம் நீங்க வழி கேட்க, பாபநாசத்தில் சுயம்புமூர்த்தியாகி புற்றின் அடியில் வீற்றிருக்கும் இறைவன் சிவபெருமானை வழிபாடு செய்தால் உமது சாபம் நீங்கிவிடும் என்றார். அதன்பின் சுகமுனிவர் இத்திருத்தலத்திற்கு வந்து கிளிகளுடன் கூட்டமாக வாழ்ந்து சுகவனத்தில்...