அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், மேட்டு அக்ரஹாரம், சேலம் - 636001, சேலம் .
Arulmigu Sugavanesuwarar Temple, Mettu Agraharam, Salem - 636001, Salem District [TM004858]
×
Temple History
தல பெருமை
சேலம் மாநகரின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்று நதிக்கரையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கிருதாயுகத்தில் நான்கு மறைகள் அரசமர வடிவில் பூஜித்து தேவர்களின் பாவங்களை போக்கியதால் பாபநாசம் என்றும், துவாபர யுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீச்சுரம், என்றும், திரேதாயுகத்தில் காமதேனு வழிபட்டதால் பட்டீசவரம் என்றும் பெயர் பெற்றது. கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுகப்பிரம்ம மகரிசி வழிபட்டதால் சுகவனம் என்றும் பெயர் பெற்றது.
ஒருமுறை பிரம்மதேவர் படைப்பின் ரகசியத்தை சுகமுனிவரிடம் கூற, அவர் அதனை சரஸ்வதிதேவியிடம் தெரிவித்ததால் சினங்கொண்ட பிரம்மதேவர் சுகமுனிவரை கிளியாகப்பிறந்திட சாபம் கொடுத்தார். தன் சாபம் நீங்குவதற்கு பிரம்மதேவரிடம் விமோசனம் கேட்க, பிரம்மதேவர் சுகமுனிவரிடம் பூலோகத்தில் இத்திருத்தலத்தில் சுவாமி புற்றின் அடியில் வீற்றிறுப்பதாகவும், அவரை வழிபாடு செய்தால் உமது சாபம்...சேலம் மாநகரின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்று நதிக்கரையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கிருதாயுகத்தில் நான்கு மறைகள் அரசமர வடிவில் பூஜித்து தேவர்களின் பாவங்களை போக்கியதால் பாபநாசம் என்றும், துவாபர யுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீச்சுரம், என்றும், திரேதாயுகத்தில் காமதேனு வழிபட்டதால் பட்டீசவரம் என்றும் பெயர் பெற்றது. கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுகப்பிரம்ம மகரிசி வழிபட்டதால் சுகவனம் என்றும் பெயர் பெற்றது.
ஒருமுறை பிரம்மதேவர் படைப்பின் ரகசியத்தை சுகமுனிவரிடம் கூற, அவர் அதனை சரஸ்வதிதேவியிடம் தெரிவித்ததால் சினங்கொண்ட பிரம்மதேவர் சுகமுனிவரை கிளியாகப்பிறந்திட சாபம் கொடுத்தார். தன் சாபம் நீங்குவதற்கு பிரம்மதேவரிடம் விமோசனம் கேட்க, பிரம்மதேவர் சுகமுனிவரிடம் பூலோகத்தில் இத்திருத்தலத்தில் சுவாமி புற்றின் அடியில் வீற்றிறுப்பதாகவும், அவரை வழிபாடு செய்தால் உமது சாபம் நீங்கிவிடும் என்பதை தெரிவிக்க, சுகமுனிவர் இத்திருத்தலத்திற்கு வந்து கிளிகளுடன் கூட்டமாக வாழ்ந்து சுகவனத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனியை நெல்மணிகளால் பூசித்து வந்தார். வேடன் ஒருவன், கிளிகளைத் துரத்த, அவைகள் புற்றினுள் பதுங்கின. அவ்வாறு பதுங்கிய கிளிகளைத் தாக்கிட, வேடன் புற்றை மண் வெட்டியால் வெட்டும்போது அங்கிருந்த சிவலிங்கத் திருமேனியை, கிளி வடிவில் இருந்த சுகமுனிவர் தன் இறக்கைகளால் மறைத்து காத்திட முயற்சிக்கையில், வேடனால் வெட்டுப்பட்டார். அப்போது சிவலிங்கத்திலிருந்து குருதிகொப்பளிக்க, வேடன் மயக்கமுற்றான். அப்போது ஈசன் அங்கே தோன்றி, சுகமுனிவரின் சாபத்தையும் விலக்கியதோடு, வேடனுக்கும் திருவருள் செய்தார். அதுமுதல், இங்கே எழுந்தருளியுள்ள ஈசன், சுகவனேசுவரர் எனும் சிறப்புப்பெயர் கொண்டார். மேலும், கிளிவனமுடையார், கிளிவனநாதர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
இத்திருத்தலத்தின் அம்மன் - சொர்ணாம்பிகை, மரகதவல்லி, திருச்செம்பொன்நாயகி என்ற திருநாமங்களுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
சேலம் நகர், தேரடியில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகணபதி திருக்கோயிலும், இரண்டாவது அக்ரகாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயிலும் இத்திருக்கோயிலின் உபகோயில்களாக விளங்கி வருகிறது.
இலக்கிய பின்புலம்
சேலம் சுகவனேசுவரர் திருக்கோயில், சேலம் நகர்
தல வரலாறு
ஒருமுறை பிரம்மலோகத்தில் தேவர்கள், தவசிகள் என அனைவரும் பிரம்மதேவரின் படைப்புத்திறனைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது படைப்பின் இரகசியத்தை பிரம்மதேவன் அவர்களுக்கு எடுத்துக்கூறினார். இதைக்கேட்ட சுகமுனிவர் (கிளிபோல் பேசும் தன்மையுடையவர்)சரஸ்வதியிடம் சென்று பிரம்மலோகத்தில் தான் அறிந்த படைப்பு இரகசியத்தைச் சரஸ்வதி தேவியிடம் கூறிவிடுகிறார். இதையறிந்த பிரம்மன், சுகமுனிவரிடம், காதால் கேட்டதைத் திரும்பச் சொல்லும் கிளியின் தன்மையைக் கொண்ட நீ கிளியாகக் கடவாய் எனச் சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த முனிவர், பிரம்மனிடம் சாபம் நீங்க வழி கேட்க, பாபநாசத்தில் சுயம்புமூர்த்தியாகி புற்றின் அடியில் வீற்றிருக்கும் இறைவன் சிவபெருமானை வழிபாடு செய்தால் உமது சாபம் நீங்கிவிடும் என்றார். அதன்பின் சுகமுனிவர் இத்திருத்தலத்திற்கு வந்து கிளிகளுடன் கூட்டமாக வாழ்ந்து சுகவனத்தில்...சேலம் சுகவனேசுவரர் திருக்கோயில், சேலம் நகர்
தல வரலாறு
ஒருமுறை பிரம்மலோகத்தில் தேவர்கள், தவசிகள் என அனைவரும் பிரம்மதேவரின் படைப்புத்திறனைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது படைப்பின் இரகசியத்தை பிரம்மதேவன் அவர்களுக்கு எடுத்துக்கூறினார். இதைக்கேட்ட சுகமுனிவர் (கிளிபோல் பேசும் தன்மையுடையவர்)சரஸ்வதியிடம் சென்று பிரம்மலோகத்தில் தான் அறிந்த படைப்பு இரகசியத்தைச் சரஸ்வதி தேவியிடம் கூறிவிடுகிறார். இதையறிந்த பிரம்மன், சுகமுனிவரிடம், காதால் கேட்டதைத் திரும்பச் சொல்லும் கிளியின் தன்மையைக் கொண்ட நீ கிளியாகக் கடவாய் எனச் சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த முனிவர், பிரம்மனிடம் சாபம் நீங்க வழி கேட்க, பாபநாசத்தில் சுயம்புமூர்த்தியாகி புற்றின் அடியில் வீற்றிருக்கும் இறைவன் சிவபெருமானை வழிபாடு செய்தால் உமது சாபம் நீங்கிவிடும் என்றார். அதன்பின் சுகமுனிவர் இத்திருத்தலத்திற்கு வந்து கிளிகளுடன் கூட்டமாக வாழ்ந்து சுகவனத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனியை நெல்மணிகளால் பூசித்து வந்தார்.
வச்சிரகாந்தன் எனும் வேடன், கவண்கல்லால் கிளிகளை விரட்டினான். அவை பறந்து சென்று ஊர்ப்புற்றில் ஒளிந்து கொண்டன. கோபமடைந்த வேடன் மண்வெட்டியால் புற்றை வெட்டக் கிளிகள் சிவபெருமான் திருவடியை நினைத்து உயிரைவிட்டன. கிளி உருவம் கொண்டிருந்த சுகமுனிவர் வேடனின் தாக்குதலால் புற்றுக்கு அடியிலிருக்கும் லிங்கத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்றெண்ணி சிவபெருமானின் முடிமேல் சிறகுகளை விரித்துப் பாதுகாத்து நின்றது. வேடன் மண்வெட்டியால் வெட்டக் கிளி இறந்துவிட்டது. சிவபெருமான் திருமுடியிலும் வெட்டுப்பட்டு ரத்தவெள்ளம் பெருகியது. இதைக்கண்ட வேடன், மனம்கலங்கி தன்னை வாளால் மாய்த்துக்கொண்டான். ஈசன் அங்கே தோன்றி, சுகமுனிவரின் சாபத்தை விலக்கியதோடு, வேடனுக்கும் திருவருள் செய்தார்.
மனித உடலைப் பெற்றுச் சுகமுனிவராகிச் சிவனைத் துதிக்க, அதனால் அகம்மகிழ்ந்த சிவபெருமான் ஏதாவது வரம் கேட்கும்படி முனிவரிடம் சொல்ல, முனிவர் எத்தகைய துன்பங்கள் வந்தாலும், உன் திருவடிகளையே கதியாக நான் அடையவேண்டும் என்றும் வேண்டினார். இறைவன் முனிவருக்கு அருள்செய்ய, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் சுகவனேஸ்வரர், கிளிவனநாதர் என்றழைக்கப்படுகிறார். இத்திருதலம் சுகவனம், கிளிவனம் என்ற பெயருடன் இக்கலியுகத்தில் சிறப்புற்று விளங்குகின்றது
கொல்லிமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, கஞ்சமலை போன்ற மலைகளாலும் காவிரி, மணிமுத்தாறு ஆகிய நதிகளாலும் சூழப்பெற்று இயற்கை எழில்சூழ் மாநகரமாகத் திகழும் சேலம் மாவட்டத்தின் மையப் பகுதியில் நமசிவாய என்னும் பஞ்சாக்கர மந்திரத்தின் அடையாளமாகச் சுட்டப்படும் பஞ்சாக்கர நதியாகிய திருமணி முத்தாறு நதிக்கரையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.பாபநாசம், பட்டீச்சுரம், சுகவனம், சுகாரண்யம், சதுர்வேதிமங்கலம், சைலம், சேரலம், சேரமண்டலம், சேலையூர் என்றெல்லாம் இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும், வரலாற்று ஆய்வுகளிலும் சுட்டிக்காட்டப்படும் சேலத்தின் சிறப்புக்குரிய திருத்தலமாக இன்றும் சிறப்புபெற்று வருகிறது.
கிரேதாயுகத்தில் நான்கு மறைகளை ஓதி வழிபட்ட தேவர்களுடைய பாவத்தைப் போக்கியதால் இத்தலத்திற்குப் பாபநாசம், எம்பெருமானுக்குப் பாபநாசர் என்றும் பெயர்.திரேதாயுகத்தில் காமதேனுப்பசுவழிபட்டதால் பட்டீஸ்வரம், எம்பெருமானுக்குப் பட்டீஸ்வரர் என்றும் பெயர். துவாபரயுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீச்சுரம், எம்பெருமானுக்கு நாகீசர் என்றும் பெயர். சிவனடி சேர்ந்ததால் கிளியுருவம் மறையப்பெற்ற சுகமுனிவர், பெருமானே உன் திருப்பெயர் சுகவனேசுவரராக இருந்து இத்திருத்தலம் அருளதர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அதுபடியே இறைவன் அருளியதால் எம்பெருமானுக்குச் சுகவனேசுவரர் என்றும் பெயர் வழங்கலாயிற்று. தற்போது கலியுகத்தில் சுகவனம் என்றும் எம்பெருமானுக்குச் சுகவனேசுவரர் என்றும் பெயர் தோன்றியது. இப்படி நான்கு யுகங்களிலும் தனிச்சிறப்புடன் பெயர்பெற்று விளங்கி வருகிறது இத்திருத்தலம்.
பாவநாசேசர், பட்டீசர், நாகீசர், வனநாதர், கிளி வண்ணமுடையார் என்றெல்லாம் வழிபடப் பெறும் மூலவர் சுகவனேசுவரர் மக்கள் அனைவருக்கும் சுகமளிக்கும் இறைவனாகவும், மரகதவல்லி, பச்சைவல்லி, திருச்செம்பொன்நாயகி என்றெல்லாம் சிறப்புபெறும் சொர்ணாம்பிகைத் தாயார் வளம் நல்கும் அன்னையாகவும் உடனிருந்து காட்சித் தருகின்றனர்.சேலம் நகர், தேரடியில் அமைந்துள்ள அருள்மிகு இராஜகணபதி திருக்கோயிலும், இரண்டாவது அக்ரகாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயிலும் இத்திருக்கோயிலின் உபகோயில்களாக விளங்கி வருகின்றன.
இத்திருக்கோயிலில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றது. ஒளவையார் தனது வளர்ப்பு பிள்ளைகளில் ஒருவருக்கு திருமணம் செய்துவிக்க இத்தல இறைவனை வழிப்பட்டதாக அறியமுடிகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் போற்றப்பட்ட இந்த கோயில், முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழில் பாடல் பாடியுள்ளார்.
மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். திருமுடியில் வேடனால் வெட்டப்பட்டத் தழும்பு உள்ளது. ஆவுடையின் பிற்பாகம் இருபிரிவுகளாகவும் விஷ்யு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப் பெற்றுள்ளது. இது பிற சிவ தலங்களில் காணமுடியாத ஒன்றாகும்.
திருக்கோயிலுக்குள் உள்ள தீர்த்தக்கிணறு வெவ்வேறு யுகத்தில் (பாபநாச தீர்த்தம், தேனு தீர்த்தம், மனுசாரனைத் தீர்த்தம்,மானசீக தீர்த்தம்)வெவ்வேறுபெயர்கொண்டு அழைக்கப்பட்டுள்ளது.தற்போது இத்தீர்த்தக்கிணற்றுக்கு அமண்டூக தீர்த்தம் என்று பெயர். (மண்டூகம் என்றால் தவளை என்று பொருள். அமண்டூகம் என்றால் தவளைகளே இல்லாத இடம் என்று பொருள்) இக்கிணற்றுக்குள் தவளைகள் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருத்தலத்தின் தலவிருட்சம் பாதிரி மரம்.
இத்திருக்கோவிலில் மூன்று நிலை ராஜகோபுரம் ஒரு பிரகாரத்துடன் அமைந்துள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர், சப்த மாதர், நால்வர், இரட்டை விநாயகர், ஆலமரச் செல்வர் சன்னிதிகள் உள்ளன.பஞ்சபூத லிங்கங்கள், கங்காடர், காசிவிஸ்வநாதர், ஜேஷ்டாதேவி ஆகிய சுற்றுப்பிரகார சன்னதிகள் அறுபடை வீடு சிற்பங்கள் கொண்ட முருகப் பெருமான் சன்னிதி, பிரம்மா, சண்டிகேசுவரர், துர்க்கை சன்னதியும் உள்ளன.
இந்தக் கோயிலில் விநாயகர், அம்மன், தக்ஷிணாமூர்த்தி, சுப்பிரமணியர் மற்றும் அண்ணாமலையார் சன்னிதிகளும் பல அருமையான கற்சிற்பங்களும் காணப்படுகின்றன. அண்ணாமலையார் உருவம் ஒரு மரப்பொந்தில் செதுக்கியிருப்பது சிற்பக்கலையின் உச்சமாகும். நவகிரகங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர்.
பல்வேறு காலத்தில் பல மன்னர்களால் பாதுகாத்துப் புனரமைக்கப்பட்டுத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 1947 ஏப்., 27ல், மகா திருக்குடமுழுக்கு நடைபெற்றது.தொடர்ந்து, .08.02.1981 இதையடுத்து,02.02.1998 திருக்குடமுழுக்கு நடந்தது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயிலின் திருக்குடமுழுக்கு விழா 24 ஆண்டுகளுக்குப் பிறகு 07.09.2022அன்று நடைபெற்றது